Monday, June 11, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
குழந்தைகள் வாழ்க்கையின் வரப்பிரசாதங்கள்..தனிமையை போக்கி எமது வாழ்வையே அழகுபடுத்துபவர்கள் குழந்தைகள் தான்.இருந்தாலும் அவர்களின் வாழ்வை அழகு படுத்தும் பொறுப்பை அல்லாஹ் ஒவ்வொரு பெற்றோருக்கும் வழங்கியுள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
(அறிவிப்பவர்:இப்னு உமர்(ரலி), நூல்: புஹ்காரி 2409)

குழந்தைகளை பயிற்றுவிப்பது என்பது கற்றல் நடவடிக்கை மட்டும் தான் என்பது அனேக பெற்றோர்களின் எண்ணம்.ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் பயிற்றுவிப்பது பெற்றோரின் கடமையாகும். பயிற்றுவித்தல் வழிமுறைகள் பல வகைப்படுகின்றன.அவற்றில் சில



  • வழிகாட்டல்
  • உபதேசம்
  • வெகுமதியும் தண்டனையும்
  • கதை கூறுதல்
  •  பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  

1. வழிகாட்டல்:-

வழிகாட்டல் மூலம் பயிற்றுவித்தல் என்பது ஏனைய வழிமுறைகளை விட சிறந்த வழிமுறையாகும். வழிகாட்டல் மூலம் பயிற்றுவிப்பதை இஸ்லாம் மிக உயர்ந்த வழிமுறையாகக் கருதுகின்றது.அடிப்படையிலேயே குழந்தைக்கு வீட்டில் இஸ்லாமிய ரீதியில் வழிகாட்டலை வழங்க வேண்டும்.
இஸ்லாமிய ஆளுமைகளுடன் பிள்ளை வளர வேண்டுமாயின் குடும்பம் தூய இஸ்லாமிய பண்புகளுடன் இருக்க வேண்டும்.அதற்கு அடிப்படை சத்திய வாக்காக குர்ஆனும் நடமாடும் சத்தியமாக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருந்தார்கள்.
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
எனவே குழந்தைகளுக்கு வழிகாட்டும் போது  குர்ஆனையும், முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை மாதிரியையும் வழிகாட்டலாக கொண்டால் உங்கள் பிள்ளைகளின் வாழ்வு சுபீட்சம் காணும்.

2.உபதேசம்:-

நல்ல உபதேசம் மனித உணர்வுகளை உசுப்பி விடுகின்றது.முன்மாதிரியான வழிகாட்டலுக்கு வெறும் உபதேசம் மட்டும் அதிக பலனளிப்பதில்லை.சிறந்த வழிகாட்டலுடன் உபதேசமும் இடம் பெறுமானால்  அது மனித உள்ளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்கும் முன் உயர் ஒழுக்கங்களை புரிய வைக்க உள்ளத்தை தொடும் உபதேசம் அவசியமாகின்றது.இத்தகைய உபதேசங்கள் அல்குர்ஆனில் அதிகமாக காணப்படுகின்றன..
அவற்றுள் லுக்மான் தனது மகனுக்குச் செய்த உபதேசம் நினைவை விட்டு அகலாத உபதேசம்.....

31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் தொடரும் ........

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

.பாகம் --02

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02


 




3 comments:

  1. மாஷா அல்லாஹ்

    அருமையான ஆக்கம் பஸ்மின்.

    பல விஷயங்களை மனதில் ஏற்றிக்க்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மா...

      இன்னும் சில விடயங்கள் தொடரும்.இன்ஷா அல்லாஹ் காத்திருங்கள்

      Delete
  2. மாஷா அல்லாஹ்

    அருமையான ஆக்கம் பஸ்மின்.

    பல விஷயங்களை மனதில் ஏற்றிக்க்கொண்டேன்.

    ReplyDelete