Thursday, June 14, 2012

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள் .பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

குழந்தைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அடுத்த முறைகள் தொடர்பாக இங்கு  நோக்கலாம்.

3. வெகுமதியும் தண்டனையும்:-

இந்த வழிமுறையானது குழந்தைகளை சீர்திருத்துவதையும் அதன் நடத்தையை நெறிப்படுத்துவதையுமே இலக்காகக் கொண்டுள்ளது. பிள்ளையைப் பழிவாங்குவதோ, குற்றங்காண்பதோ, மிரட்டுவதோ இதன் நோக்கமன்று .இங்கு வெகுமதியும் தண்டனையும் பிள்ளையை சீர்திருத்தவும், தகாத நடவடிக்கையை மாற்றியமைக்கவும், நல்ல செயல்களை ஊக்கப்படுத்தவும்  உதவும் வழிமுறைகளில் ஒன்று.தண்டிப்பதற்கு முன்னால் குழந்தையின் இயல்பை அறிந்திருப்பது அவசியமாகும்.

இமாம் கஸ்ஸாலி தனது "இஹ்யா"வில் பிள்ளையை பயிற்றுவிப்பவரை மருத்துவருக்கு ஒப்பிடுகின்றார்.
 "பிள்ளையிடம் ஒரு நற்பண்பு காணப்படும் போது அதனைப் பாராட்டுவதும், அதற்கு பரிசு வழங்குவதும் பலருக்கு முன்னால் அதனை புகழ்வதும் அவசியமாகும்.பிள்ளை இதற்கு முரணாக நடந்துவிட்டால் அதனை பெரிதுபடுத்தாது, அதன் குறையைக் கூறி அவமானப்படுத்தக்கூடாது.மீண்டும் மீணடும் அந்த தவறை செய்தால் இரகசியமாக அதனை தண்டிக்க வேண்டும்"
குழந்தை நற்செயல் செய்தால் வெகுமதி கிடைக்கும் என்பதையும் அளவோடு கையாள வேண்டும்.இந்த நிலை அதிகரித்தாலும் ஆபத்து.எதிர்பார்ப்பு அதிகமாகி கிடைக்காத சந்தர்பத்தில் குழந்தை ஏமாந்து போக வாய்ப்புண்டு..அதே நேரம் தண்டனை வழங்கும் போது பாரதூரமாக நடந்து கொள்ளாது கண்ணியமான முறையில் நடந்து கொள்ளவேண்டும்.

4. கதை கூறுதல்:-

பேராசிரியர் அப்துர் ரஷீத் கூறும் போது "கதைகூறுதல் பிள்ளைகளை பயிற்றுவிக்கும் முறைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முறையாகும் " என்கிறார்.கதையின் இயல்பு, மையக்கருத்து என்பவற்றை அடிப்படையாக கொண்டே அது குழந்தையிடம் நேர்நிலையான அல்லது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.குழந்தைகளின் நடத்தையை நெறிப்படுத்துவதிலும், ஒழுக்கத்தை வலியுறுத்துவதிலும், கற்பனை ஆற்றலை வளர்பதிலும், ஆளுமை விருத்தியிலும் கதை பாரிய செல்வாக்கை கொண்டுள்ளது.கதையை தெரிவு செய்யும் போது ஆழமாக யோசித்து பின் கூறவேண்டும்

துப்பறியும் கதைகள், ஐதீக கதைகள், மூடநம்பிக்கையை வளர்க்கும் கதைகளை தவிர்த்து.இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் நபிகளாரின் வாழ்க்கை முறைகள்..சஹாபா தோழர்களின் தியாகம், இஸ்லாம் வளர்ந்து வந்த பாதை என்ற ரீதியில் கூறும் போது குழந்தைகள் சிறுவயதில் இருந்தே இஸ்லாமிய சூழலில் வளர வாய்ப்புள்ளது..

எளிய மொழியில், இனிய சொல்நடையில் கதைகூறுதல் அவசியமானது..குழந்தையின் விருப்பம், மனநிலையின் அடிப்படையில் கதைகூற வேண்டும்.எதையும் திணிக்க வேண்டாம்...
5. பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  :-

இறுதியான வழிமுறையாக பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல்  என்பது இளவயதில் கிடைக்கின்ற வாழ்க்கை அனுபவங்களே வாழ்க்கை முழுவதற்கு தொடரும்.இதற்கு ஒரு பழமொழியும் உண்டு."தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்" பேராசிரியர் முஹம்மத் குத்ப் கூறும் போது " பழக்கத்தின் மூலம் பயிற்றுவித்தல் சில குறிப்பிட்ட விடயங்களை தொடந்து வழிகாட்டும் போது அதனை குழந்தைகள் இலகுவாக பின்பற்றுவர்"

இஸ்லாமிய பயிற்சி கோட்பாட்டின் படி பழக்கத்திற்கு சிறந்த உதாரணம் வணக்க வழிபாடுகளை பயிற்றுவித்தலாகும்.சிறிய வயதில் இப்பழக்கத்தை ஏற்படுத்துவது எளிது.இறைதூதர் (ஸல்) பொறுப்புக்களை ஏற்கும் பருவத்திற்கு முன்னரே பிள்ளைகளை தொழுகைக்குப் பழக்குமாறு ஏவினார்கள்.பின் அது அன்றாட பழக்கமாக மாறிவிடும்.

"ஏழுவயதாகும் பிள்ளைகளுக்கு தொழும்படி ஏவுங்கள், பத்து வயதாகும் போது அதற்காக அடியுங்கள்"

இதே போன்று பல விடயங்களை பழக்கத்திற்கு கொண்டு வரலாம்.சிறுவயதிலேயே ஹிஐ◌ாப் அணிய பழக்கினால் பருவமடைந்தபின் சடங்காக அணியும் நிலை தொடராது.எந்தவொரு விடயமும் இறைவனின் கட்டளை என்பதை பிள்ளைகளுக்கு பழக்கிவிட்டால் யார் சொன்னாலும் பின் அதில் மாற்றம் ஏற்படாது...

எனவே மேற்குறிப்பிட் வகையில் எமது பிள்ளைகளை சிறய விடயங்களில் கூட அக்கறை கொண்டு கவனிப்போமானால்  நல்ல தலைவர்கள் நமது வீட்டிலேயே உருவாகி விடுவார்கள்.இன்ஷா அல்லாஹ் நாமும் இதனை பின்பற்றி நடந்தால் நாளை மறுமையில் அல்லாஹ;விடத்தில் எமது பொறுப்புக்கள் தொடர்பாக தயக்கமின்றி பதிலளிப்பதோடு அல்லாமல் குடும்பத்துடன் சுவனம் புகலாம்..

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரி
பஸ்மின் கபீர்

பாகம் --01

இஸ்லாத்தின் அடிப்படையில் குழந்தைகளை பயிற்றுவிக்கும் வழிமுறைகள்


2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    குழந்தை வளர்ப்பில் பின்பற்ற வேண்டிய நுணுக்கமான விசயங்கள் அடங்கிய தொகுப்பு...

    இதில் தான் அதிகமாக நாம் அக்கறை செலுத்த வேண்டும். அருமையாக சொன்னீங்க மா

    வாழ்த்துகள் பஸ்மின்

    ReplyDelete
    Replies
    1. வலைக்கும் ஸலாம் வரஹ்...


      ஐஸாக்கல்லாஹைரா சகோதரி

      Delete